கொரோனா ஒழியட்டும் – புதியவன் வியாசர் லாரன்ஸ்

சங்கத்தமிழும் சந்திக்கும் வங்ககடலோரம்
சீறிப்பாயும் அலைகள் தாலாட்ட
சிங்காரமாயமைந்த சென்னை நகரியே
கொக்கரித்த கொரோனாவை கண்டு
அகிலமே அடங்கிய வேளை
ஆடாத ஆட்டமெலாம் ஆடினாய்
இடைவெளியை மறந்து
இளக்காரமாய் சிரித்து
இரண்டாமிடத்தை பிடித்தாய்
இன்னும் அடங்கவில்லையென
இன்னுமோரிரண்டுவாரம் ஒட்டுமொத்தமாய் ஒடுங்கப்போகிறாய்-உன்
ஓங்காரம் ஒழியாதோ கொடும்
கொரோனா கோரத் தாண்டவம்
குறையாதோ
பட்டபின்னும் தெளியாதெனில்
பட்டுப்போகும் வாழ்வு
பார் போற்றும் நகரம்
பாழாகும் முன்னே
பக்குவமாய் அடங்கு
பத்திரமாய் வாழு-உடல்
மூன்று வேளை கழுவாவிடில்
மூச்சு முட்டி சாவாய்
மிளகு பூண்டு இஞ்சியென
உணவு உண்டு பிழைப்பாய்
கபசுர குடிநீர் கபமகற்றி
கடுங்காய்ச்சலதை நீக்கும்
கட்டுப்பாடு காத்தால்
கலகலப்பாய் வாழ்வாய்-இனி
காலமெல்லாம் மகிழ-இக்
கொரோனா ஒழியட்டும் என
பிரார்த்தனை செய்யும் உன்
நலம் விரும்பும்

– புதியவன் வியாசர் லாரன்ஸ்…!!!

#vysasarLawrence #PuthiyavanLawrence #CoronaDisappear #TamilChristianInfor #TamilChristian

[/et_pb_text][/et_pb_column][/et_pb_row][/et_pb_section]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஊழியமும் ஊழியர்களும் - சுவி. பாபு T தாமஸ்

Tue Jun 1 , 2021
தேவ ஊழியமும் ஊழியர்களும் இன்றைய காலக் கட்டத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் சீர்த்தூக்கி பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நாம் அனைவரும் கடைசி காலங்களில் வாழ்ந்து வருகிறவர்கள். ஆகவே கடைசி காலங்களில் ஊழியர்களும் அவர்தம் பணிகளும் எப்படி இருக்கும் என்பதைக் குறித்த வெளிச்சத்தை தேவனாகிய கர்த்தர் ஆவியானவர் மூலமாக தெளிவாக வேதாகமத்தின் வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே நாம் ஜாக்கிரதையாக தெளிந்து உணர்ந்து செயல்ப் படுவது நல்லது அவசியமும் […]

You May Like