Poems கவிதைகள்

சங்கத்தமிழும் சந்திக்கும் வங்ககடலோரம்
சீறிப்பாயும் அலைகள் தாலாட்ட
சிங்காரமாயமைந்த சென்னை நகரியே
கொக்கரித்த கொரோனாவை கண்டு
அகிலமே அடங்கிய வேளை
ஆடாத ஆட்டமெலாம் ஆடினாய்
இடைவெளியை மறந்து
இளக்காரமாய் சிரித்து
இரண்டாமிடத்தை பிடித்தாய்
இன்னும் அடங்கவில்லையென
இன்னுமோரிரண்டுவாரம் ஒட்டுமொத்தமாய் ஒடுங்கப்போகிறாய்-உன்
ஓங்காரம் ஒழியாதோ கொடும்
கொரோனா கோரத் தாண்டவம்
குறையாதோ
பட்டபின்னும் தெளியாதெனில்
பட்டுப்போகும் வாழ்வு
பார் போற்றும் நகரம்
பாழாகும் முன்னே
பக்குவமாய் அடங்கு
பத்திரமாய் வாழு-உடல்
மூன்று வேளை கழுவாவிடில்
மூச்சு முட்டி சாவாய்
மிளகு பூண்டு இஞ்சியென
உணவு உண்டு பிழைப்பாய்
கபசுர குடிநீர் கபமகற்றி
கடுங்காய்ச்சலதை நீக்கும்
கட்டுப்பாடு காத்தால்
கலகலப்பாய் வாழ்வாய்-இனி
காலமெல்லாம் மகிழ-இக்
கொரோனா ஒழியட்டும் என
பிரார்த்தனை செய்யும் உன்
நலம் விரும்பும்

– புதியவன் வியாசர் லாரன்ஸ்…!!!

#vysasarLawrence #PuthiyavanLawrence #CoronaDisappear #TamilChristianInfor #TamilChristian

[/et_pb_text][/et_pb_column][/et_pb_row][/et_pb_section]

Poems கவிதைகள்

நிஜமான உயிர்மீட்சி இனிஇங்கு தேவை
தரமான நல்மனிதர் உருவாக வேண்டும்
கனமான பணிமுடிப்போர் ஏகமாய் எழும்பியே
இனமான இந்தியர்க்காய் உழைத்திட வேண்டும்

வரப்புகள் தணிந்திட இதுவே காலம்
கொள்கைகள் நம்மை பிரித்திட அனுமதியோம்!
கண்கள் குழமாகி கருத்தாய் ஜெபிப்போம்
இந்தியர்கள் கல்வாரி அன்பினை ருசித்திடுவார்!!

உண்மையாய் உழைப்போம் உயிரோடு உள்ளவரை
உன்னதர் பணிக்கு என்றும் திறந்த வாசலே
வாருங்கள், ஏகமாய் இராஜதூது பகிர்ந்தளிப்போம்!
எழுப்புதல்கனவு நனவாகிட உழைப்போம், வாரீர்!!

– சாஹா

Poems கவிதைகள்

அன்பே பிரதானம்

ஆசையாக பாஷைகள் பல பேசினாலும்
நேசமான பாசமது உள மிலையெனில்
ஓசைமிகு கைத்தாளமே யான் வெறுமதிர்
ஒலியெழு வெண்கலமே என உணர்வேன்

வருஞ்செயல் உரைத்திடு வரமி ருந்தும்
மறைபொருள் அறிந்திடு தரமி குந்தும்
மலைநகர்த்தும் கலையறிந்தும் அன்பு நீங்கின்
சிலையளவே நிலையாகும் நிதம் அறிவேன்

அன்னதானம் ஆயிரம் தான் பண்ணியும்
என்னதான் நன்மையே நான் எண்ணியும்
என்சரீரம் நெருப்பிலிட உளம் நண்ணியும்
நேசம்நீக்கி வாசம்செயின் பயன் விண்ணுமோ?

மாற்று மொழிகளும் விரைந்து குறையுமே
மகிமை வரங்களும் பறந்து மறையுமே
அறிவின் முழுமையும் அழிந்து ஒழியுமே
அன்பின் தன்மையோ நிலைத்து நிற்குமே

எதிர்வரும் செயல்தனில் அதி விசுவாசம்
எதுவரினும் நிலைகுலையா திட நம்பிக்கை
இதயமதில் வழிந்தோடும் தூய அன்பு
இம்மூன்றில் அன்பதுவே நேய பண்பதுவாம்.

– தாரா (உலகிற்கு வார்த்தை)