Songs பாடல்கள்
https://youtu.be/g_JM4mRVQfI

Lyrics and Tune – Samraj Hopper

Featuring – Rachel and Keerthana

Chord: E-Major

12.12.2016 அன்று சென்னையை “வார்தா” என்ற பயங்கர புயல் தாக்கிக் கொண்டிருந்த சமயத்தில், காலை 11.30 மணியளவில் எங்கள் இல்லத்தில் அன்பின் ஆண்டவர் சமூகத்தில் செலவிட்ட இனிய நேரத்தில் இந்த பாடல் பிறந்தது. பரிசுத்த வேதாகமத்தில் மறுரூப மலையின் சம்பவத்தை மையமாக வைத்து இப்பாடல் எழுதப்பட்டது.

உம் பிரசன்னமே, என் வாஞ்சையே
உம் சமூகமே, என் தாகமே
உம்மைத் தேடி வந்தேன், நாடி வந்தேன்
உம்மோடு வாழ்ந்திட ஏங்குகிறேன்

1) மறுரூபமாக்கிடும் அனுதினமே
உம் வசனத்தின் வெளிச்சத்தில் நடந்திடுவேன்
மெய்யான திராட்சைச் செடியின் கொடிபோல்
உம்மோடு உறவாடி மகிழ்ந்திருப்பேன்

2) மகிமையின் மேகம் நிழலிடட்டும்
மறுரூப அனுபவம் தொடங்கிடட்டும்
நேசக்குமாரன் இயேசுவுக்கு
செவிகொடுத்திட என்னை வழிநடத்தும்

3) மோசே, எலியா போல் என்னையுமே
உம் சித்தம் செய்திட பெலப்படுத்தும்
இருளில் வாழ்வோர் ஒளி கண்டிட
என்னையும் தேவா பயன்படுத்தும்

சாம்ராஜ் ஹாப்பர்
Teaching & Training Mission

gospel

அன்பான சகோதர, சகோதரிகளே,

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு நோக்கத்திற்காக, சரித்திரம் படைப்பதற்காக, போட்டிகளில் வெற்றி அடைவதற்காக , தாங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைப்பதற்காக பலமுறை நீங்கள் முயற்சி செய்திருக்கலாம். அதில் ஒன்று கூட தாங்கள் நினைத்தபடி வெற்றி கிடைக்கவில்லையே என்று நீங்கள் ஏமாந்து போயிருக்கலாம் (அல்லது) விரக்தி ஏற்பட்டிருக்கலாம். நம்முடைய கண்களுக்கு முன்பாக மற்றவர்கள் வெற்றி பெற்றதை பார்க்கும்போது நம்முடைய இருதயம் நொந்து போயிருக்கலாம். இந்த தோல்வி மட்டுமல்லாமல் உங்கள் வாழ்க்கையிலும் எந்த ஒரு காரியத்திலும் உங்களுக்கு தோல்வியே ஏற்பட்டிருக்கலாம்.

இதனால் உங்களுக்கு சமாதானம், சந்தோஷம், உணவு, உறக்கம் இவற்றில் ஒன்று குறைந்தாலும் உடல் நலம் பாதிக்க வாய்ப்புகள் உண்டு. இதற்காக பல வழிகளை தேடியிருக்கலாம். பலரை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கலாம். ஆனாலும், அந்த வழிகளும், அந்த ஆலோசனைகளும் கைகூடாமல் போயிருக்கலாம். மற்றவர்கள் உங்களை உதாசினப்படுத்தியிருக்கலாம். உங்களை வெறுத்து, உங்களைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி, உங்களை வேதனைப் படுத்தியிருக்கலாம். இப்படியான சூழ்நிலையில் நீங்கள் தவிக்கும் போதும், தடுமாறும் போதும், உங்களை காப்பாற்ற, உங்களை கை தூக்கி விட, உங்களை காப்பாற்ற ஒரே ஒரு தெய்வத்தால்தான் முடியும் என்பது நிச்சயம். அவர்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

ஏற்கெனவே மேலே சொல்லியிருக்கிற காரியங்களில் சிக்கி கொண்டிருப்பவர்களை விடுதலை கொடுக்கும்படி இயேசு கிறிஸ்து பூமியிலே மனிதராகி வந்தார். அவர் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார் (மத்தேயு 11:28). தலை மேல் சுமக்கிற பாரமல்ல. உங்கள் இருதயத்திலே வேதனையோடும், சஞ்சலத்தோடும், கண்ணீரோடும், கவலையோடும் இருப்பவர்களைத்தான் இயேசுகிறிஸ்து இப்படி சொல்லியிருக்கிறார். ஆகவே அன்பான சகோதர, சகோதரிகளே, கலங்காதேயுங்கள், பயப்படாதேயுங்கள். உங்கள் நம்பிக்கையையும், உங்கள் விசுவாசத்தையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது வைத்து விடுங்கள். அவர் உங்களை காப்பாற்ற உங்களுக்கு சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்க அவர் உயிரோடும் இருக்கிறார். ஆகவே அன்பான சகோதர, சகோதரிகளே, இந்த அருமையான சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் ஒன்று மட்டும் சொல்ல வேண்டிய காரியம். இயேசுவே என்னை இரட்சியும் என்று உங்கள் இருதயத்தின் ஆழத்தில் இந்த இயேசுவை நோக்கி நீங்கள் சொன்ன மாத்திரத்தில் உங்கள் இருதயத்திற்கு உண்மையான மகிழ்ச்சி, சந்தோஷம், சமாதானம், சுகம் நிச்சயமாக உங்களுக்கு கொடுப்பார் என்பது அதிக நிச்சயம்.

பைபிள் சொல்கிறது மத்தேயு 24:25 வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு முடிவு உண்டு. உன் நம்பிக்கை வீண் போகாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Poems கவிதைகள்

நிஜமான உயிர்மீட்சி இனிஇங்கு தேவை
தரமான நல்மனிதர் உருவாக வேண்டும்
கனமான பணிமுடிப்போர் ஏகமாய் எழும்பியே
இனமான இந்தியர்க்காய் உழைத்திட வேண்டும்

வரப்புகள் தணிந்திட இதுவே காலம்
கொள்கைகள் நம்மை பிரித்திட அனுமதியோம்!
கண்கள் குழமாகி கருத்தாய் ஜெபிப்போம்
இந்தியர்கள் கல்வாரி அன்பினை ருசித்திடுவார்!!

உண்மையாய் உழைப்போம் உயிரோடு உள்ளவரை
உன்னதர் பணிக்கு என்றும் திறந்த வாசலே
வாருங்கள், ஏகமாய் இராஜதூது பகிர்ந்தளிப்போம்!
எழுப்புதல்கனவு நனவாகிட உழைப்போம், வாரீர்!!

– சாஹா

News செய்திகள்

EGYPT COPTIC CHRISTIANS KILLED IN IRAQபெப்ருவரி 12, 2015 அன்று எகிப்தை சார்ந்த காப்டிக் கிறிஸ்தவர்கள் 21 பேரை லிபியாவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி கடற்கரையில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இது உலகின் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இறுதி வரை கிறிஸ்துவை மறுதலியாமல், தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நின்று, இரத்த சாட்சியாக மரித்த இந்த 21 எகிப்திய காப்டிக் கிறிஸ்தவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு ஒரு சவால் என்றால் அது மிமையாகாது.

மத சுதந்திரத்துக்கு இந்தியாவிலும் அச்சுறுத்தல் பெருகி வரும் இக்கால கட்டத்தில், கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒற்றுமையும், அன்பும், பரிவும், கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசமும் நாளுக்கு நாள் பெருக வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஜெபத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

Bible Study வேத ஆராய்ச்சி counseling

பெற்றோர் இல்லாத வீட்டில் தங்களின் பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்படுகிறவர்களைக் கேட்டுப்பாருங்கள் “பெற்றோர் மிகவும் அருமையானவர்கள்” என்று கட்டாயம் சொல்லுவார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் பெரியவர்கள் இல்லை என்றால் நிலைமை இன்னும் மோசம் தான்.

பெலன் உள்ளவரை பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பலவிதங்களில் உதவிகள் செய்கிறார்கள். வீட்டின் பொருட்களை அதனதின் இடத்தில் வைப்பது, அவசர நேரத்தில் பக்கத்து கடைக்கு சென்று பொருள் வாங்கி வருவது, பேரக்குழந்தைகளுக்கு தேவைப்படும் பல்வேறு உதவிகள், சமையலில் சிறு சிறு உதவிகள், ஓய்வுதியம் வாங்கினால் ஒரு பங்கினை கொடுத்து உதவுவது, பிள்ளைகள் இல்லாத நேரத்தில் பொறுப்பாக வீட்டை பார்த்துக் கொள்வது என்று பல்வேறு விதங்களில் கலக்குகிறார்கள். பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். இவைகளை செய்வதற்கு பெரியவர்களுக்கு நேரம் நிறைய உண்டு, ஆனால் பெலன் குன்றும் போது, வயது அதிகரிக்கும் போது பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. அப்போது அதே பெரியவர்கள் பிள்ளைகளுக்கு பாரமாக தோன்றுகிறார்கள்.

பண உதவியோ, வேறு உதவிகளோ செய்ய இயலாத பெற்றோரை இன்றைய சந்ததி எந்த அளவு மதிக்கிறது? கவனிக்கிறது? போற்றுகிறது? என்பதை சற்று அலசிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

elders_1தனியாக உட்கார்ந்து ஒரு நாள் யோசித்துப்பாருங்கள். நீங்கள் இவ்வுலகில் நீங்கள் பிறந்த நாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? எப்படி இருக்கும்? வாய்ப்பே இல்லை. நீங்கள் அழுதீர்கள். உங்கள் அம்மா தன் இரத்தத்தையே உருமாற்றி உங்களுக்கு உணவாக கொடுத்தார்கள். அப்பா அம்மா இரவெல்லாம் கண்விழித்து உங்களை கவனித்துக் கொண்டார்கள். கடினமாக உழைத்து உங்களை போஷித்தார்கள், நீங்கள் சிரித்த போது அவர்களுகும் சிரித்தார்கள். நீங்கள் அழுதபோது அவர்களும் வேதனைப்பட்டார்கள். உங்களை வளர்த்து ஆளாக்குவதற்கு தங்களால் ஆன எல்லா பிரயத்தனங்களையும் செய்தார்கள். உங்களுக்கு ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடி, நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார்கள். அல்லது நீங்கள் விரும்பினவரை சுற்றுமும் நட்பும் எதிர்த்தாலும் உங்களுக்காக மணமுடித்துக் கொடுத்தார்கள். அப்படித்தானே!

ஓல்ட் ஏஜ் ஹோம்! பெற்றெடுத்த பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு அல்லது வேதனை தாங்க முடியாமல் தாங்களாகவே வேறு வழியின்றி வந்து தங்கிடும் இடம் தான் முதியோர் இல்லம். முதியோர் இல்லங்களில் கிறிஸ்தவ பெற்றோர்களை காணும் போது நாம் எங்கோ தவறு செய்கிறோம் என்று தோன்றுகிறது.

கர்த்தருடைய வார்த்தை என்ன சொல்கிறது. சற்று கவனிப்போமா?

உபா-5:16 உன் தேவனாகிய கர்த்தர்; உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும் உன் தேவனாகிய கர்த்தர்; உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

நீதி-20:20 தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காலீஜீருளில் அணைந்துபோம்.

பிரியமானவர்களே, நம்முடைய வீட்டில் உள்ள பெரியவர்கள் நமக்கு உதவி செய்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்து நாம் அவர்களை மதித்து நடத்துவது தவறானது. ஒருவேளை அவர்கள் சிறிய தவறுகள் செய்தாலும், சற்று அதிகமாக பேசினாலும் பொறுத்துக்கொள்ளலாமே!. பெற்றோரோடு நேரம் செலவிடுங்கள், மனம் விட்டு பேசுங்கள், அவர்களது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள். திடிரென ஒரு நாள் அவர்கள் நம்மை விட்டு கடந்து போய்விடுவார்கள். அதன்பின் வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை.