வானவில்லை நோக்கும்போது நமது உள்ளங்களில் குதுகலம்தான். வானவில்லை நமதாண்டவர் அதை ஒரு அடையாளமாக நிறுத்தினார் (ஆதியாகமம் 9:13). இனிமேல் தண்ணீரினால் மனித குலத்தை அழிக்காமல் இருக்க வானவில்லை உடன்படிக்கை அடையாளமாக வைத்தார். அது மனித குலத்திற்கான நம்பிக்கை அடையாளம்.

நாமும்கூட மற்றவர்களுக்கு நம்பிக்கை அடையாளமாக இருக்கலாமே! நாம் கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றிருக்கிறோம். கிறிஸ்துவின் ஒளி நம் மூலமாக இந்த உலகத்திற்கு பரவ வேண்டும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (மத்தேயு 5:16). அதனால் நாமும் மற்றவர்களுக்கு நம்பிக்கை அடையாளமாக இருக்கலாம். வானவில்லைப் போன்று நாமும் அழிவிற்கு நேராய் பயணிப்போருக்கு கிறிஸ்துவை நம்பிக்கை அடையாளமாக காட்டும் சின்னமாக இருப்போமாக.
கிறிஸ்துவின் இராஜ்யத்தைக் கட்டும் சிற்பிகளில் ஒருவன்,
சுவிசேஷகர் யோவான் காந்தி இரா
Anchor Ministries
Deepa says:
Great message brother
Yovan says:
Thanks Sister